Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஸாவில் பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை

காஸாவில் பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை
, புதன், 30 ஜூலை 2014 (16:52 IST)
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 23 வயது பெண்ணின் கருவில் இருந்து 8 மாத குழந்தை காப்பாற்றப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
காஸாவின் தியர் அல்-பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷைமா, இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27 ஆம் தேதி இவரது வீட்டின் மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் பலியான இவரின் கருவில் இருந்த குழந்தையை அசைவதை உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.
 
தாய் உயிரிழந்து ஒரு மணி நேரம் கழித்து கருவில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. 
 
தற்போது இன்குபேட்டரில் இருக்கும் அக்குழந்தை நலமாக இருப்பதாகவும், இன்னும் 3 வாரங்கள் அக்குழந்தை மருத்துவமனையில் இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil