Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தியின் பேத்தி மீது மோசடி வழக்கு

காந்தியின் பேத்தி மீது மோசடி வழக்கு
, செவ்வாய், 20 அக்டோபர் 2015 (20:20 IST)
தென்னாப்பிரிக்காவில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது  மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 


மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான, ஆஷிஸ் லதா ராம்கோபின்(45) மீது ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இவர், தென்னாப்பிரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், இவர் சில மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கைகள் இந்தியாவில் இருந்து வந்திருப்பதாகவும், அதற்கு சுங்கவரிக் கட்ட நிதியுதவி தேவை எனக் கூறி, சிலரிடம் 5 கோடி வரை பணம் வாங்கியுள்ளார். 
 
ஆனால், லதா பொய் சொல்லிதான் பணம் வாங்கியிருக்கிறர் என்று அவர் மீது பணம் கொடுத்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.  இது சம்பந்தமாக லதா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil