Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்: 263 ஆண்டு சிறை தண்டனை

4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2016 (10:07 IST)
அமெரிக்காவில் நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறையினருக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிலா. கடந்த 2013 ஆம் ஆண்டு அந்நகரில் காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
 
அவர் தனது பதவியைக்காட்டி, மிரட்டி நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர்மீது புகார் எழுந்தது.
 
இதைத் தொடர்ந்து, கடந்த 2015 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட டேனியலுக்கு எதிராக ஒக்லஹோமா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
 
இவர், வறுமை நிலையில் உள்ள இளம் பெண்கள் மற்றும் அமெரிக்க - கருப்பினத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்து, பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த வழக்கில் அவருக்கு எதிராக 13 பெண்கள் சாட்சி அளித்தனர். அவர் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
 
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேனியல் ஹோல்ட்ஸ்கிலாவிக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!