Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளால் இறந்த பயிற்சியாளர்: இறந்தது தெரியாமல் விளையாடிய புலிகள்

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (15:58 IST)
இத்தாலியில் சர்க்கஸ் பயிற்சியாளர் ஒருவரை புலிகள் கொன்றுவிட்டு அவர் இறந்தது கூட தெரியாமல் அவருடன் விளையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன விலங்குகளை சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்துவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதனால் பல நாடுகளில் சர்க்கஸில் வன உயிரினங்களை பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. இருந்தாலும் இத்தாலி போன்ற சில நாடுகளில் இன்னும் அதற்கான சட்டங்கள் எதுவும் வரவில்லை.

இத்தாலியில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர் எட்டோர் வெபர். அந்த சர்க்கஸில் உள்ள நான்கு புலிகளுக்கும் இவர்தான் பயிற்சியாளர். வெளியே புலிகளாய் தெரிந்தாலும் வெபரிடம் பூனைப்போலவே கொஞ்சி விளையாடின அந்த புலிகள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் புலிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கூண்டுக்குள் சென்றார் வெபர். அப்போது ஒரு புலி விளையாட்டாக அவர் மேல் தாவ, அதை பார்த்து மற்ற புலிகளும் அவர் மேல் தாவின.

திடீரென ஆக்ரோஷமடைந்த புலிகள் தங்களுக்குள் சண்டை போட்டபடி வெபரையும் கடித்து குதறிவிட்டன. இதில் வெபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது தெரியாமல் கீழே கிடந்தவரை எழுப்பிவிட அந்த புலிகள் முயற்சித்து கொண்டிருந்தன. காவல்துறையினரும், சர்க்கஸ் பணியாளர்களும் எவ்வளவு முயற்சி செய்தும் புலிகள் அவரது உடலை விட்டு விலகாமல் தொடர்ந்து விளையாடியபடியே இருந்துள்ளன.

வெபர் இறந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அவரை கொன்றுவிட்டது கூட தெரியாமல் விளையாடி கொண்டிருந்த புலிகளை நினைக்கையில் பலர் வருந்தினர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments