Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (16:23 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்று ரேஞ்சர் படையினர் கைது செய்துள்ளனர்.



பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு முன்னாள் பிரதமர் இம்ரான் ஆட்சியின் போது, அதிக சொத்துகள் சேர்த்ததாகவும்,  ஊழல் செய்ததாகவும், வெளிநாட்டில் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இவர் ஆளும் அரசிற்கு எதிராக கருத்துகள் கூறுவதும் விமர்சிப்பதுமாக இருந்தார். இந்த நிலையில், சில வழக்குகள் தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு அவர் லாகூரில் இருந்து  வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர்.

அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இம்ரான் கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல்.. உபி முதல்வர் தமிழ் ட்வீட் வைரல்..!

தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை: காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்..!

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? ஓசூரில் விமான நிலையம் சாத்தியமில்லை: அண்ணாமலை பதிலடி..!

கமல்ஹாசன் கட்சியில் விழுந்த இன்னொரு விக்கெட்.. மாநில கட்டமைப்பு செயலாளர் விலகல்..!

இந்தி கற்று கொள்வது நல்லது: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments