Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனில் கொரோனாவா..? அச்சத்தை போக்க எக்ஸ் அமைச்சர் செய்த செயல்..!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:02 IST)
மீன் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் மீன் வியாபரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாகியும் கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் மெல்ல கொரோனாவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.
 
இந்நிலையில் மீன் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் இலங்கை மக்கள் பெரும்பாலோனார் மீன்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் வியாபரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் இந்த அச்சத்தை போக்க இலங்கை முன்னாள் அமைசர் திலீப் வெத ஆராச்சி, செய்தியாளர்கள் சந்திப்பில் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். 
 
மேலும், இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றில் சில மீன்களை மாதிரிக்காக சோதித்த சீன சுங்க துறை அதிகாரிகள் அந்த மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதியை சீனா ஒரு வார காலம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments