Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுத் தீயில் கருகி சாம்பலாகிய 100 வீடுகள்: 400 பேர் வெளியேற்றம்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (20:21 IST)
சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோ அருகே பரவிய காட்டுத் தீயால் 100 மர வீடுகள் எரிந்து சாம்லாகின. அப்பகுதியில் வசித்து வந்த 400 பேர் வெளியேற்றப்பட்டனர்.


 

 
சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோ அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக பிளாயா அஞ்சா மலைப்பகுதிக்கு தீ பரவியது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
 
தீ பரவியது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சம்பவ விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். முன்னெச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சுமார் 100 மர வீடுகள் தீயில் கடுகி சேதமடைந்தது. காற்று தொடர்ந்து அதிகமாக வீசுவதால் மேலும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ பரவ வாய்ப்புள்ளது என்றும், சுமார் 500 வீடுகள் தீயில் கடுகி சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments