Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

Mahendran
புதன், 2 ஏப்ரல் 2025 (16:04 IST)
வங்கதேசத்தில் பானிபூரி  சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வங்கதேச நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரவில் நடந்த திருவிழாவில் பானிபூரி  சாப்பிட்டவர்கள் தங்களது வீடு திரும்பிய பின்னர் கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைகள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
 
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், பொதுமக்கள் சாப்பிட்ட பானிபூரியில் பாக்டீரியாக்கள் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பானிபூரி  கடைக்காரரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அனைத்து பானிபூரி  கடைகளிலும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments