Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானியங்கி பறக்கும் கார்கள் 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2015 (13:45 IST)
உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



 
இதற்கான ஆராய்ச்சியில், கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
 
இந்த பறக்கும் கார், பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது. இந்தக் கார்களில் 2 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பறக்கும் கார், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் வகையில் ஒரு மாடலும், மனிதர்களே ஓட்டும் வகையில் மற்றொரு மாடலும் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களைப் போன்று தரையில் வேகமாக ஓடி, அதன்பின்னர் சிறிய ரக விமானம் போல மேல் எழும்பிச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த கார் 400 மைல் தூரம்வரை விண்ணில் பறந்தபடி விரைவாக சென்றடையும். பாரச்சூட்டின் உதவியுடன் இறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இது கீழே இறங்கும்போது, சில நூறு அடி நீளம் கொண்ட ஒரேயொரு செயற்கை புல்தரை மட்டும் இருந்தால் போதும். இந்த பறக்கும் காரை தரையிறக்கி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments