Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதிய விமானம்.. 10 பேர் பரிதாபமாக பலி..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
மலேசியாவில் திடீரென தரையிறக்க வேண்டிய நிலையில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் இறங்கியதை அடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பரிதாபமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
 மலேசியாவை சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார்.
 
அப்போது அவர் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கியதால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது
 
இந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து மலேசியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிசியான சாலைகள் விமானம் திடீரென இறங்கியது அடுத்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடல்

பாம்பன் பாலத்தில் திடீர் பழுது.. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments