Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? பிரான்ஸில் தரையிறங்கிய விமானம்..!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (07:18 IST)
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது,
 
துபாயில் இருந்து தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்த விமானம் ஒன்று நிகரகுவா சென்று, அங்கிருந்து அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
 
ஆனால் திடீரென vஇமானம் பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும்,  விமானம் தரையிறக்க அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், இதையடுத்து, விமானம் இறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
சோதனையில் விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாகவும்,
பெரும்பாலானோர் இந்தி பேசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 303 பேரில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை வருகிறது. முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே நேரத்தில் 303 பேர் ஒரே விமானத்தில் வந்ததன் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments