Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக வளாகத்தில் புகுந்த விமானம்: ஆஸ்திரேலியாவில் விபத்து!!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (11:20 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் சிறிய ரக விமானம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.


 
 
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டாஸ்மானியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உள்ள கிங் தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்காக, 5 பேரை ஏற்றிக்கொண்டு, சிறு ரக விமானம் ஒன்று எஸ்ஸன்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
 
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகாமையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் பாய்ந்தது. 
 
அந்த சிறு ரக விமானத்தில் 5 சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
 
மேலும், வணிக வளாகத்திற்குள் இருந்த ஆட்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments