Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரியல் பூங்காவில் தீ; கருகி உயிரிழந்த குரங்குகள்

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:54 IST)
ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன.

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் அமைந்துள்ளது கிரெஃபெல்டு உயிரியல் பூங்கா. இந்த பூங்கா மிகவும் பழமையான பூங்கா என அறியப்படுகிறது.

இதில் சிம்பான்சி, ஓராங்கட்டான் கொரில்லா போன்ற குரங்குகளுக்கு பிரத்யேக சரணாலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் திடீரென  பூங்காவில் தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் தீ பூங்கா முழுவதும் பரவியது.

இந்த விபத்தில் சரணாலயத்தில் இருந்த 32 குரங்குகளில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. உயிரியல் பூங்காவில் எவ்வாறு தீ பிடித்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments