Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகளை மீறி கிளப்பில் ஆட்டம் போட்ட பிரதமர்… மன்னிப்பு கோரல்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:52 IST)
பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பின்லாந்து நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த பட்டியலில் பின்லாந்து பிரதமர் சன்னா மரினும் இருந்தார்.

ஆனால் அவர் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் நடன கிளப் ஒன்றில் விடிய விடிய நடனமாடி கேளிக்கை செய்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி குறுஞ்செய்தி தன்னுடைய அலுவலக தொலைபேசிக்கு அனுப்பப்பட்டதாகவும், அது வீட்டில் இருந்ததால் தன்னால் அந்த குறுஞ்செய்தியைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments