Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுப்பாடம் செய்யாத மகனை நடுத்தெருவில் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த தந்தை

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (22:26 IST)
சீனாவை சேர்ந்த ஒருவர் தனது பத்து வயது மகனை பட்டப்பகலில் நடுரோட்டில் கட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவத்தின் புகைப்படம் ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தெற்கு சீனாவை சேர்ந்த சாங்குயிங் என்ற மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தனது மகன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பள்ளி ஆசிரியர் செய்த புகார் காரணமாக மகன் மீது ஆத்திரம் அடைந்தார்.

உடனே பத்து வயது மகனை நடுத்தெருவில் முழங்கால் போட செய்து அவனது கையில் நீளமான கம்பை கட்டி, கிட்டத்தட்ட சிலுவையில் அறைந்தது போல சுமார் ஒருமணி நேரம் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட சிறுவனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த புகைப்படம் ஒருசில நிமிடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து போலீசார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments