Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையில் விழுந்து கிடந்த ஆளில்லா விமானம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (16:17 IST)
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நேற்று திங்கட்கிழமை (26-01-2015) ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து கிடந்தது.
 
நேற்று முன்தினம் இரவு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணி அளவில் ஒரு மரத்தின் மீது மோதிய சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று புல்வெளியில் விழுந்து கிடந்தது.
 

 
இந்த விமானம் குறித்து அமெரிக்க ரகசியப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது, முற்றிலும் பாதுகாப்பு வளையத்தை மீறி நடந்துள்ளதால், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் ரகசிய பிரிவால் யார் என அடையாளம் காணமுடியவில்லை. இது 2 அடி நீளமும் 2 பவுண்ட் எடையும் கொண்டதாக இருந்தது.
 
அமெரிக்கா அதிபர் ஒபாமா அவரது மனைவியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒபாமா மகள்கள் சாஷா, மாலியா ஆகியோர் இந்தியா வரவில்லை. பள்ளியில் விடுமுறை கிடைக்காததால் அவர்களால் வரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments