Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்சாலையில் தீ…52 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (17:42 IST)
வங்காள தேசத்தில் உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு வங்காள தேசம். இந்நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் என்ற மாவட்டத்தி ரூப்கஞ்சில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 52 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்திலிருந்து தப்பிக்க தொழிற்சாலையின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 6 தளங்களைக் கொண்ட இத்தொழிற்சாலையீல் மேலும் பலர் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். புகை மூட்டும் நிலவுவதலா மீட்புப்பணியில் தாமதம் நிலவுகிறது.  இந்த விபத்தில் சுமார் 12 பேர் வரை காணவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments