Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் தங்கைக்கு பாலியல் தொல்லை!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (16:40 IST)
உலகப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இவரின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கையான ராண்டி ஜுக்கர்பெர்க் மெக்சிகோவிலிருந்து  மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு அருகாமையில் இருந்த பயணி ஒருவர் ராண்டியிடம் பாலியல் உரையாடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்ற பெண் பயணிகள் குறித்தும் அவர் கமெண்ட் அடித்து உள்ளார்.
 
சற்று நேரம் பொறுமையாக இருந்த ராண்டி, இது குறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ இந்த நபர் அடிக்கடி விமானத்தில் வருபவர் என்றும்  அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் பொறுப்பில்லாமல் பதில் கூறியுள்ளனர். வேண்டுமென்றால் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். தான் எந்த தவறும் செய்யாத போது நான் ஏன் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என  ராண்டி ஜுக்கர்பெர்க் விமான ஊழியர்களிடம் கேட்டுள்ளார். 
 
அலாக்ஸா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மார்க் ஜுக்கர்பெர்க்கை  தொடர்பு கொண்டு பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தபடுவதாகவும் தற்காலிகமாக அந்த பயணி பயணிக்க தடை விதித்துள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்