Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மக்களை பிரித்துவிட்டேன்; மன்னிப்பு கேட்டு உருகிய ஃபேஸ்புக் நிறுவனர்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (13:39 IST)
நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் மக்களை பிரித்து விட்டதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.


 

 
யூதர்களின் புனித தினமான யோம் கிப்புர் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
 
நம்முன் கடந்து போன ஒரு வருடத்தை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் நமது தவறுகளுக்கு மன்னிப்பினைக் கோரி நிற்கிறோம். நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மூலம் பெரும்பாலும் மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிட்டது நிகழ்ந்திருக்கிறது. 
 
அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன். வரும் ஆண்டு நம் அனைவருக்கும் சிறப்பான ஒன்றாக அமையும்.
 
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments