Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்; 120 பயணிகளின் கதி என்ன? – பிலிப்பைன்சில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (12:28 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவு ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பிலிப்பைன்ஸ் நாட்டை சுற்றி சில தீவுகள் உள்ள நிலையில் அத்தீவுகளை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கப்பல்களில் பயணம் செய்கின்றனர். இதற்காக பல சிறிய ரக கப்பல் சேவைகளும் பில்லிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிலையில் அவற்றின் பராமரிப்பு தரம் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள சிக்விஜோர் பகுதியில் இருந்து போஹோல் மாகாணத்திற்கு 120 பயணிகள் மற்றும் சில பணியாளர்களுடன் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்த எஸ்ப்ரென்சா ஸ்டார் என்ற சொகுசு கப்பல் அதிகாலை நேரத்தில் நடுக்கடலில் திடீரென தீப்பற்றியுள்ளது.

செய்தியறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments