இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவருடைய உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான் 12 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவரது முன்னாள் உதவியாளர் 79 வயதுடைய பெஞ்சமின் ஹெர்மான். இவர் கடந்த 1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார்.
அப்போது அவர் அரச மாளிகையில் பணிபுரிந்த 12 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஹெர்மான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இளவரசர் பிலிப் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இவரும் பங்கேற்று வந்தார். எனவே டைரியில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளரா என்பது குறித்து நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!