Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பொதுத்தேர்தல் முடிவு: பிரதமர் தெரஸா மே அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (06:32 IST)
பிரெக்ஸிட் நடவடிக்கை, தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் இருந்த இங்கிலாந்து நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.



 


2020ஆம் ஆண்டு வரை ஆட்சியின் காலம் இருந்தலும் பிரதமர் தெரசா மே அறிவிப்பின்படி அங்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிப்பின்போது இது தெரஸாவின் தவறான முடிவு என்று அவரது கட்சியிலேயே பலர் விமர்சித்தனர். தற்போது அது உண்மையாகியுள்ளது.

ஆம், இங்கிலாந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி பிரதமர் தெரஸா மே அவர்களின் கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி கன்சர்வேடிவ் கட்சி 15 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முடிவு பிரதமர் தெரஸா மே அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தெரஸா மே அவர்களின் கன்சர்வேடிங் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது தொங்கு பாராளுமன்றம் அமையுமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments