ட்விட்டரில் எடிட் ஆப்சன் வேண்டுமா..! எலான் மஸ்க் கேள்விக்கு கை தூக்கிய நெட்டிசன்கள்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:51 IST)
ட்விட்டரிக் எடிட் ஆப்சன் வைக்க வேண்டுமா என எலான் மஸ்க் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிற்கு பலரும் ஆதரவளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர் முக்கியமான இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ட்விட்டரில் ஒருமுறை பதிவிட்டால் அதை எடிட் செய்யும் வசதி கிடையாது.

இந்நிலையில் பிரபல பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் வேண்டுமா என கேட்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டார். அதில் 74.5 சதவீதம் பேர் எடிட் ஆப்சன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் கருத்துகளை கூறியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் என்பதால் அவரது இந்த கருத்துக்கு மதிப்பு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments