Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம்.. உயிரணு வழங்கினாரா எலான் மஸ்க்?

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (16:09 IST)
செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் செய்வதற்காக எலான் மஸ்க் தனது உயிரணுவை தானமாக வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தனது சொந்த உயிரணுவை செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் செய்யும் ஆராய்ச்சிக்காக தானமாக அளித்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிருடன் வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ் எக்ஸ் என்ற எலான் மஸ்க் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உயிரணுவை தானமாக எலான் மஸ்க்  வழங்கியிருந்தார் என்று அந்த செய்திகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த செய்தியை எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் உண்மை தன்மை இல்லை என்றும் தான் யாருக்கும் உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் நிறுவனம் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments