Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவிழாவில் மக்களை வீசியெறிந்த யானைகள்! – இலங்கையில் சோகம்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:12 IST)
இலங்கையில் திருவிழா ஒன்றில் திடீரென மக்களை தூக்கி வீசி கொண்டு ஓடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை தலைநகர் கொலம்போவில் புத்த மடாலயம் ஒன்றில் திருவிழா நடைபெற்றது. பல்வேறுவிதமான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்ற வேளையில் சில யானைகளும் அலங்கரிக்கப்பட்டு வலம் வந்து கொண்டிருந்தன. அமைதியாக சென்று கொண்டிருந்த ஒரு யானை கூட்டத்தை கண்டு வெகுண்டது. கூட்டத்தில் உள்ள மக்களை தும்பிக்கையால் தூக்கி வீசயபடி அது ஓடியது. இதை கண்டு அலறிய பொதுமக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

மக்கள் அலறிக்கொண்டு ஓடி வருவதை கண்ட மற்றொரு யானையும் பயத்தில் பிளிறிக்கொண்டு எதிர்பட்டவர்களை மிதித்து கொண்டு ஓடியது. யானைகளால் 17 பேர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy : metro.co.uk

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments