Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையில் வாழைப்பழம் சாப்பிட்ட பாப் பாடகியை கைது செய்த போலீசார்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (01:01 IST)
பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடினர்.





இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷ்யாமா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் பாடலின் வரியும் ஆபாசத்தை தூண்டுவதாக பலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த எகிப்து போலீசார் தானாகவே முன்வந்து வழக்கு தொடர்ந்து பாடகி ஷ்யாமாவை கைது செய்தனர். இதுகுறித்து பாடகி ஷ்யாமா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments