Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி : 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:11 IST)
இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, இங்கிலாந்து நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் புதிதாகப் பிரதமரான லிஸ் டிரஸ், தம் அரசாங்கத்தின் 2 லட்சம் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க முடியும் என இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படமாட்டாது என்ற தகவலும் வெளியாகிறது.

இதனால், அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிறதா மதிமுக? நயினார் நாகேந்திரன் பதில்..!

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments