Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி : 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:11 IST)
இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, இங்கிலாந்து நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் புதிதாகப் பிரதமரான லிஸ் டிரஸ், தம் அரசாங்கத்தின் 2 லட்சம் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க முடியும் என இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படமாட்டாது என்ற தகவலும் வெளியாகிறது.

இதனால், அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments