Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எபோலா: லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:11 IST)
எபோலா நோய் பரவுவதைத் தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவை அந்நாடு அதிபர் பிறப்பித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய் தாக்கி  இதுவரை 1,229 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் 2 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவை அந்நாடு அதிபர் பிறப்பித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லைபீரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments