எபோலா நோய் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 மே 2018 (11:23 IST)
எபோலா நோய் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்தது.
 
இந்நிலையில், இந்த நோய் மீண்டும் காங்கோ நாட்டில் பரவி வருகிறது. இதனால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எபோலா நோயால் தான் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எபோலா நோய் மீண்டும் பரவி வருவதால் அனைத்து நாடுகளையும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான அதிகாரபூர்வமான சிகிச்சை எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவும் இஸ்ரேலும் பேரழிவை சந்திக்கும்!.. டிரம்ப் மண்டியிடுவார்!.. ஈரான் பதிலடி!...

சிபிஎஸ்இ வினாத்தாளில் QR குறியீடுகள் ஸ்கேன் செய்தால் கூகுளுக்கு செல்கிறதா? வாரியம் விளக்கம்..

டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு போட்ட அமெரிக்க இந்திய வழக்கறிஞர் ஸ்மிதா.. ஆதாரங்கள் தாக்கல்..!

துபாயில் உள்ள Oracle, அமேசான் நிறுவனங்களை ஈரான் தாக்கியது உண்மையா? விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

ஹார்முஸ் ஜலசந்தியில் நாங்கள் மட்டுமே உயிர்களை இழந்துள்ளோம்.. 60 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கவலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments