Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
, புதன், 13 மே 2015 (10:22 IST)
ஜப்பான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. 
 
இன்று காலை  6.12 மணியளவில், பசிபிக் கடல் பகுதியான ஹோன்சு தீவுகளின் கிழக்கு கடல் பகுதியில், கடலுக்கடியே 38.9 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 
 
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியாவின் வடமாநிலங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil