Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (13:14 IST)
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஜப்பான் நாட்டில் சற்று முன் மிகப்பெரிய அளவில்  பூகம்பம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரை ஓரமுள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்தோனேசியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சுனாமி வரவில்லை என்பதால் அந் நாட்டு மக்கள் நிம்மதி அடைந்தனர். 
 
அதேபோல் ஜப்பான் நாடும் தப்பிக்குமா அல்லது சுனாமியால் மீண்டும் பாதிக்கப்படுமா என்பதை இன்னும் சில மணி நேரத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments