Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம்…மக்கள் பீதி

Webdunia
வியாழன், 11 மே 2023 (22:13 IST)
ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.

சமீபகாலமாக, துருக்கி, இந்தோனேஷியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானிலும் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை தெற்கு சிபா மாகாணத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப்பதிவாகியுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலும், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கம் எதிரொலியால் தலைநகர் டோக்கியோவில் உள்ள  வணிக வளாகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் லிப்ட்டுகள்  மணி நேரம் வரை நிறுத்தப்பட்டதாக கூறினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments