சீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (11:40 IST)
சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சிக்குவான் மாகாணம். அந்த பகுதியில் திடீரென்று நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் மையப்புள்ளியிலிருந்து 16 கி.மி. ஆழத்தில் தோன்றிய இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்ததாகவும் 112 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால நடவடிக்கையாக அந்நாட்டின் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிக்குவான் மாகாணத்தின் பல பகுதிகளில் குடியிறுப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் பொது மக்கள் பலர் வீடுகளில் தங்கமுடியாமல் வீதிகளில் குடியிருக்கின்றனர்.

ஆதலால், அந்நாட்டின் தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு துறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 கூடாரங்களையும், 10,000 படுக்கை விரிப்புகளையும் 20,000 போர்வைகளையும் வழங்கியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, இதே சிக்குவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால், 90,000 பேர் பலியானர்கள். மேலும் 1976 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 250,000 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments