Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு துருக்கியில் நள்ளிரவில் பூகம்பம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (07:35 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தை துருக்கி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் சுமார் 600 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் துருக்கியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியேறினர்

தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து தூக்க கலக்கத்துடன் வீட்டை விட்டு வெளியே குழந்தைகளுடன் ஓடி வந்தனர்

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை யாரும் காயம் அடையவில்லை என்றும் பொருட்சேதங்கள் குறித்து இனிமேல் தான் கணக்கிட வேண்டும் என்று துருக்கி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments