Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசைகள் நிறைவேறிய பின் உயிரிழந்த 4 வயது சிறுவன்

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2014 (18:31 IST)
இங்கிலாந்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 4 வயது சிறுவன் ஒருவர் அவரின் ஆசைகள் பூர்த்தி ஆன நிலையில் உயிரிழந்தார். 
 
இங்கிலாந்தை சேர்ந்தவர்  ஜாக் ராபின்சன் என்ற 4 வயது சிறுவன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மூளையில் கட்டி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 
இதையடுத்து, வான்சிஸ்டர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இச்சிறுவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் சில கட்டிகள் அகற்றப்பட்டன.
 
இதனையடுத்து கீமோ தரப்பி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலம் மற்ற கட்டிகளை அழி்க்க மருத்துவர்கள் முயன்றபோது பலனின்றி போனதால் சிறுவன் வாழும் நாட்கள் கேள்விக்குறியாகின.
 
 

இதனால், இறப்பதற்கு முன்பே தனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என கருதிய சிறுவன், நடிகர் மாட் ஸ்மித் மற்றும் கேரி பார்லோ என்ற பாப் பாடகரை பார்க்க வேண்டும் என்றும் முன்கூட்டியே  கிறிஸ்மஸ்,  பிறந்தநாள் கொண்டாடுவதுடன், நீராவி ரயில் இன்ஜினில் பயணிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இவரது விருப்பத்திற்கு இணங்க பிரிட்டிஷ் நடிகர் மற்றும் பாப் பாடகர் இவனை மருத்துவமனையில் வந்து சந்தித்தனர்.
 
இதனைதொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, நீராவி ரயில் இன்ஜினிலும் சிறுவனுடன் பெற்றோர் பயணித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
 
தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், சிறுவன் நேற்று உயிரிழந்ததாக அவரது தாய் தெரிவித்துள்ளார். 
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments