Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லியம்-கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது

Webdunia
சனி, 2 மே 2015 (19:57 IST)
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும்.
 
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை உள்ளூர் நேரம் காலை 08.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.
 
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார்.
 
தாயும் சேயும் நலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
 
பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹாரி மற்றும் இரு குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments