Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரை காப்பாற்ற வெளியே குதியுங்கள்; துபாய் விமானத்தின் கடைசி நிமிட வீடியோ

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (14:38 IST)
திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் ஏகே521 விமானம் நேற்று, துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீ பிடித்தது. அந்த விபத்தில் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் என 300 பேரும் அதிரிஷ்டவசமாக உயிர் தப்பினர்.


 

 
அந்த விமானத்தில் தீ பற்றியவுடன், அதில் இருக்கும் பயணிகள் வெளியேற முயற்சி செய்வதும், அதற்குள் “உங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள, பொருட்களை விட்டு விட்டு உடனடியாக வெளியே குதியுங்கள்” என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர்கள் வேகவேகமாக அங்கிருந்து ஓடும் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
 
விமானத்தில் பயணம் செய்த ஒருவர், இந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். 
 
இதில் ஒரு முக்கிய செய்தி என்னவெனில், அனைத்து பயணிகளும், அவசரமாக விமானத்திலிருந்து கீழே இறங்குவதற்கும், விமானத்தி ஒரு பகுதி வெடித்து சிதறுவதற்கும் சரியாக இருந்தது என்று, அந்த விமானத்தில் பயணம் செய்த, கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர் என்பவர் கூறியுள்ளார்.
 
“நாங்கள் வெளியேறி ஒரு நிமிடத்திற்குள் விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. அதன் பின் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. நல்ல வேளையாக நாங்கள் உயிர் தப்பிவிட்டோம். எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை. நாங்களாகவே எங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டேம்” என்று அவர் கூறினார்.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments