Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்தது உண்மையா? பரபரப்பு தகவல்..!

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:20 IST)
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் இது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
 
புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படம் எடிட் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
 
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உண்மையான படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடியபோது அந்தப் படத்தில் ராமரின் படம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உரிமையாளர் எமராட்ஸ் குழுமம், ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் துபாய் போன்ற நாடுகளில் கூட ராமர் மதிக்கப்படுகிறார் என்பதை நிரூபிக்க இந்தச் செய்தி பரப்பப்பட்டதாகவும், இந்தச் செய்தியை பரப்பியவர்கள், புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாகக் கூறும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை மறைத்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments