Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:14 IST)
குஜராத்   மாநிலத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
சமீபகாலமாக போதைப் பொருள் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், மற்றும் போலீஸாருடன் இணைந்து அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதற்காக விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகிறது.

இந்த  நிலையில் குஜராத்   மாநிலத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலம் பக்ரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மும்பை போதைப் பொருள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வரவே, உடனடியாக அங்கு சென்ற மும்பைபோதைப் பொருள் தடுப்புப் புரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 513 கிலோ எம்பி போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1063 கோடி என அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 1 பெண் உட்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments