Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 25 பேர் அகால மரணம்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (21:20 IST)
ரஷ்யாவின் சைபீரியாவில் போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மட்டும் சுமார் 6,000 மக்கள் வசித்து வருகின்றனர். இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள சைபீரிய நகரில் மது வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் போலி மதுபானங்களை குடித்து வருகின்றனர். அல்லது குளியல் எண்ணெயில் சிறிது ஆல்கஹால் இருக்கும் என்பதால் போதைக்காக அதை வாங்கி அருந்தி வருகின்றனர்.

இப்படி வாங்கி அருந்தியவர்களில் 42 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியாயினர். மேலும் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குளியல் எண்ணெய் விற்றது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணெய் விற்பனையை தடை செய்ய உத்தேசித்து வருவதாக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் டிமிரிதி மேத்வேதேவ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments