Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலுவலகம் வர வேண்டாம் .. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட டுவிட்டர் நிறுவனம் !

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (19:20 IST)
அலுவலகம் வர வேண்டாம் .. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட பிரபல நிறுவனம் !

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் பிரபல டுவிட்டர் நிறுவனம் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டாமெனவும், வீட்டில் இருந்தபடி பணி செய்யுமாறு டுவிட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments