Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கான அதிகாரபூர்வமான நேரம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (11:59 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். ஆனால், திடீரென டிரம்ப், கிம் உடனான சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் பின்னர் மீண்டும் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் தெரிவித்தார்.
 
இந்நிலையில் டிரம்பும், கிம்மும் வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments