Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்: டொனால்ட் டிரம்ப்

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (14:56 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் பள்ளி குழந்தைகள் போல சண்டையிடுகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலையின் பின்னர், நேற்று நள்ளிரவில் ஈரான் தாக்கப்பட்டது. . இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தொடங்கிய நிலையில், இஸ்ரேல் அரசு பதிலடி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "இஸ்ரேல்-ஈரான் இடையே நிலைமை மோசமாகி வருகிறது. இது நடந்தே தீரவேண்டும் என காத்திருந்தேன். ஈரான் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளது, இது மோசமானது. பள்ளி குழந்தைகள் சண்டையிடுவது போலவே இது தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும், அவர்கள் சண்டையிடட்டும், ஆனால் நிச்சயமாக இது ஒரு பயங்கரமான போர். மத்திய கிழக்கில் அமெரிக்கா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், "நான் அதிபராக இருந்த போது மத்திய கிழக்கில் போர் இல்லை, ஈரான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவின் திறமையற்ற நபர்களால் மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உள்ளதாகவே தெரிகிறது" என்றும் அவர் கூறினார்."


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments