Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினம் கொண்டாட வேண்டாம்: பாகிஸ்தான் அதிபர் அறிவுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (14:23 IST)
உலகம் முழுவதும் இன்று காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்றும் அது மேற்கத்திய கலாசாரம் என்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன் தெரிவித்துள்ளார்.
 
 
பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காவலர்களும் நட்சத்திர ஹோட்டல் மற்றும் பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதை தடுக்க ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சர்தார் அப்துல் ரப் ரிஷ்தாரின் நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் மாணவிகள் பெருமளவில் பங்கேற்று இருந்தனர். இந்த விழாவில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டார். 
 
அப்போது அவர் பேசுகையில்" காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாசாரம். அது நமது கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானில் அதற்கு இடமில்லை.
 
அந்த தினத்தை தவிர்த்து விடுங்கள். நமது நாட்டில் காதலர் தினம் கொண்டாட வேண்டாம். அதை உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். 
 
மேலும், பாகிஸ்தான் சைபர் பக்துன்கவா மாகாண தலைநகர் பெஷாவரில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், காதலர் தினத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments