Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை குத்துனா பீட்சா இலவசம்: குவிந்த மக்கள் - கடுப்பான பீட்சா நிறுவனம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (13:50 IST)
தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தியது அவர்களுக்கே பிரச்சனையாய் முடிந்துள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகவும் பிடித்த உணவாக பீட்சா மாறிவிட்டது. சோறு இல்லைன்னாலும் பரவாயில்லை பீட்சா வேண்டும் என பல குழந்தைகள் பெற்றோரை நச்சரிப்பதை நாம் பார்க்கிறோம்.
 
இதனால் பல பீட்சா நிறுவனங்கள் மக்களை கவர பல்வேறு ஆஃபர்களை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள இரு இடத்தில் டாமினோஸ் பீட்சா நிறுவனம் புதிய கிளை ஒன்றை துவங்கியது. புது கடை என்பதால் வாடிக்கையாளர்களை கவர நிறுவனம் ஒரு வித்தியாசமான டெஸ்டை வைத்தது. தங்களது கம்பெனி லோகோவை உடலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொண்டால் இலவச பீட்சா அளிக்கப்படும். ஒரு வருடத்திற்கு 100 பீஸா என்று 100 வருடத்திற்கு பீட்சா அளிக்கப்படும் என்று போட்டி வைத்தது. ஆஃபர் 2 மாதங்கள் நடைபெற இருந்தது.
இதனைக்கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் டாமினோஸை நோக்கி படையெடுத்தனர். இவ்வளவு பேர் வருவார்கள் என்று டாமினோஸ் நிறுவனமே நினைக்கவில்லை.

இதனால் டாமினோஸ் நிறுவனம் இரண்டு மாதம் நடத்த வேண்டிய இந்த போட்டியை 4 நாட்களில் நிறுத்தியது. இறுதியாக 400 பேர் இந்த இலவச பீட்சா சலுகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாரகள்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments