Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிமையாளரை கடித்து கொன்ற நாய்கள்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (14:20 IST)
வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்கள் அதன் உரிமையாளரை கடித்து கொன்றுள்ளது. 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேத்தே ஸ்டீபன்ஸ்(22)  என்ற பெண் வசித்து வந்தார். அவர் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் ஸ்டீபன்ஸ் கடந்த  கடந்த வாரம் தனது இரண்டு வளர்ப்பு நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நியூயார்க் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸார் அவரின் உடலை சிதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் ஸ்டீபன்ஸ்  வளர்த்த நாயே அவரை கடித்து கொன்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
சிறு வயதிலிருந்து வளர்த்த சொந்த நாய்களே அதன் உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments