Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்திற்கு முகம் காட்டிய பெண்ணை திருமணத்தன்று இரவு விவாகரத்து செய்த கணவன்

Webdunia
புதன், 19 நவம்பர் 2014 (16:12 IST)
சவுதி அரேபியாவில் திருமணத்தன்று கணவனுக்கு முதலில் முகத்தை காட்டாமல் புகைப்படத்திற்கு முகம் காட்டிய மனைவியை கணவர் விவாகரத்து செய்தார்.
 
சவுதி அரேபியாவில் உள்ள தெற்கு நகரமான மதீனாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுள்ளது. அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
 

 
இந்நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு, மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு நடந்தது. அப்போது போட்டோகிராபர் மணமகளிடம் முகம் காட்டும்படி கூறியுள்ளார். உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு போட்டோவுக்கு முகம் காட்டியுள்ளார். 
 
இதனால் எரிச்சலடைந்த மணமகன், "நான் திருமணம் செய்ய விரும்பிய பெண் நீ அல்ல" என்று கூறி , விவாகரத்து கோரியுள்ளார்.
 
இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும் மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். இதனால் மணமகள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments