மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை புரிந்த தமிழக மாணவி- தினகரன் பாராட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:02 IST)
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய – பசிபிக்  மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி  வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை  நடைபெற்று வரும் 6வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6  பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும்  பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments