Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை புரிந்த தமிழக மாணவி- தினகரன் பாராட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:02 IST)
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய – பசிபிக்  மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி  வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை  நடைபெற்று வரும் 6வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6  பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும்  பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லடாக்கில் கைது செய்யப்பட்ட சோனம் வாங்க்சு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மந்திரத்தை அமித்ஷா எங்களுக்கு வழங்கினார்.. பாஜக நிர்வாகி

பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும், நல்லதே நடக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தவெக ஆட்சி அமைந்ததும் கிட்னி திருடர்கள்தான் முதல் டார்கெட்? - நாமக்கலில் முழங்கிய விஜய்!

முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் மீது புகார்.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments