Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம்தான்: எங்க தெரியுமா?

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (16:24 IST)
உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இங்கு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான்.


 

 
உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர் இருக்கும். இந்த பகுதியில் ஜூன், ஜூலை போன்ற மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
 
ஆனால் அப்போதும் மைனஸ் டிகிரியில் தான் இருக்கும். இந்த பகுதியின் கோடை காலங்களில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி அளவில் இருக்கும். இந்த ஒய்மயகோன் பகுதியில் டிசம்பர் மாதம் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான். கோடை காலங்களில் 21 மணி நேரமாக உள்ளது.
 
இந்த பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குளிர் காரணாமாக எதுவும் விளையாது. ஆகையால் இவர்களது உணவு மான் இறைச்சியும், குதிரை இறைச்சியும். அந்த பகுதியில் ஒரு கடையும் உள்ளது.
 
இந்த பகுதி மக்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவது தான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments