Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரில் கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.! காஸாவில் 24 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை..!!

Senthil Velan
செவ்வாய், 16 ஜனவரி 2024 (09:59 IST)
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். நவம்பர் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.
 
இதனையடுத்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காஸாவில் போரால் இதுவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 
ALSO READ: 8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: 112 வயது மூதாட்டி ஆதங்கம்..!
மேலும் 60,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.  போரில் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் போரில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments